Friday, November 26, 2010

அட பாவிகளா ஆண்களின் மச்சத்தில இவளவு இருக்கா?

· வலது பொட்டில் மச்சம் இருந்தால் திடீரென பெரும்
செல்வமும் புகழும்கிடைக்கும்.

· நெற்றியின் வலப்புறத்தில் மச்சம் இருந்தால்
எதிர்பாராத தனப்பிராப்தி கிடைக்கும்.

· வலது புருவத்தில் மச்சம் இருந்தால் அதிர்ஷகரமான
மனைவி அமைவார்.

· வலது கண்ணில் மச்சம் இருந்தால் நண்பர்கள்
உறவினர் மூலம் புகழ் கிடைக்கும்.

· வலது கண்ணுக்குள் வெண்படலத்தின்
மேற்புறத்தில் மச்சம் இருந்தால் அவர் ஆன்மீக
சிந்தனையுள்ளவராக புகழ் பெற்று விளங்குவார்.

· இரு கண்களில் ஏதெனும் ஒன்றில்
வெண்படலத்தின் கீழ் புறத்தில் மச்சம்
இருந்தால் அவர்களுக்கு பல பிரச்சனை
சந்திப்பார்கள்.

· இரு கண்களில் ஏதேனும் ஒரு வெளிப்புற
ஓரத்தில் மச்சம் இருந்தால்
அவர் வாழ்க்கை சீராக இருக்கும். இருப்பினும்
தனது வாழ்நாளில் அவர்
ஏதேனும் ஒரு வன்முறை சம்பவத்தை
சந்திப்பார்.

· இடது புருவத்தில் மச்சமிருந்தால்
பணக்கஷ்டமான வாழ்க்கை அமையும்.

· இடது கண் வெண்படலத்தில் மச்சமிருந்தால்
வறுமையான வாழ்க்கைஅமையும் இருப்பினும்
அதை சமாளிக்கும் பக்குவமும் இருக்கும்.

· இடது கண்ணின் வலப்புறத்தில் சொத்து
விஷயங்களில் சங்கடங்களை சந்திப்பார்கள்.
இருப்பினும் ஓரளவுக்கு சொத்தை சேகரித்து
விடுவார்கள்.

· இடது கண்ணின் இடப்புறத்தில் மச்சம்
இருந்தால் உறவினர்களுடன்பிரச்சனை
ஏற்பட்டு தனிநபர் ஆவார்கள். இருப்பினும்
அவர்களது வாழ்நாளின் பிற்பகுதியில்
அதிர்ஷ்டத்தை அடைவார்கள்.

· மூக்கின் மேல் பகுதியில் மச்சம் இருந்தால்
அவர்கள் எல்லா சௌகரியமும்
பெற்றிடுவார்கள்.

· மூக்கின் வலதுபுறத்தில் மச்சம் இருந்தால்
நினைத்ததை நடத்தி முடிக்கும்
வல்லமை பெற்றிருப்பார்கள்.

· மூக்கின் இடது புறத்தில் மச்சம் இருந்தால்
எதை நம்பாதவர்களாகஇருப்பார்கள்.
தவறான பெண்ணின் நட்பு_சிநேகமும்
இவர்களுக்கு இருக்கும்.

· மூக்கின் நுனியில் மச்சம் இருந்தால்
அவர்கள் தயக்க குணம் உள்ளவர்களாக
இருப்பார்கள், சற்றே கர்வமும், சற்றே
பாதுகாப்புஉணர்வும் இவர்களிடம் மிகுந்திருக்கும்.

· மூக்கின் கீழே மச்சமுள்ளவர்கள் கேடான
வழிகளில் பணத்தை செலவிடுபவர்களாக
இருப்பார்கள்.

· நாசித்துவாரங்களுக்கு மேலே மச்சம்
உள்ளவர்கள நவநாகரீக மோகமுள்ளவர்களாக
இருப்பார்கள். வசதியான வாழ்க்கையை
கொண்டிருப்பார்கள்.

· மேல் உதட்டிலோ அல்லது கீழ் உதட்டிலோ
மச்சம் இருந்தால் அவர்கள் காதல் உணர்வு
மிகுந்திருப்பார்கள்.

· மோவாயில் மச்சம் இருந்தால் செல்வாக்கு,
புகழ் இவற்றோடு சமூகத்தில் நல்ல
மதிப்பு பெற்றிருப்பார்கள்.

· மோவாயின் இடதுபுறத்தில் மச்சம்
இருந்தால் அவர்கள் மேடு, பள்ளமான
வாழ்க்கையை அனுபவிப்பார்கள்,கல்வியறிவும்
குறைவாக இருக்கும்.

· மோவாய்க்கு அடியில் மச்சம் இருந்தால்
அவர்கள் இசையில் வல்லுநர்களாக இருப்பார்கள்.

· வலது கன்னத்தில் மச்சம் இருந்தால்
அவருக்கு பிறரை வசீகரிக்கிற சக்தி இருக்கும்.
உறவினர்கள் அவரை மிகவும் நேசிப்பார்கள்.
எப்பொழுதும் சிரித்த முகத்துடன் மகிழ்ச்சியான
வாழ்க்கை அமையும்.

· இடப்புறக் கன்னத்தில் மச்சம் இருந்தால்
அவர் வறுமை,உயர்வு என இரண்டு விதமான
வாழ்க்கையை மாறி, மாறிஅனுபவிப்பார்.

· வலது காதில் மேல் நுனியில் மச்சம்
இருந்தால் தண்ணீரில் கண்டம் இருக்கக்கூடும்.

· இடது காதின் மேல் நுனியில் மச்சம் இருந்தால்
பெண்கள் சம்பந்தமான விஷயங்களில்
எச்சரிக்கையாக நடந்து கொள்ளவேண்டும்.

· இரண்டு காதுகளிலும் மச்சம் இருந்தால்
அவர் அதிர்ஷ்டக்காரர். பேச்சுதிறன், பிறரை
வசீகரிக்கும் ஆற்றல், செல்வம் எல்லாமும்
அவரை வந்தடையும்.

· தொண்டையில் மச்சம் இருந்தால்
திருமணத்தின் மூலம்அவர்களுக்குச் சொத்து
கிடைக்கும்.

· கழுத்தின் வலதுபுறத்தில் மச்சம்
இருந்தால் பங்காளிகளின் மூலம் பெயரும்,
புகழும், சொத்தும் கிடைக்கும்.

· கழுத்தின் இடது புறத்தில் மச்சம் இருந்தால்
அவர் மிதமான நலன்களுடன் வாழ்வார்.

· இடது மார்ப்பில் மச்சம் இருந்தால் ஆண்
குழந்தைகள் நிறைய பிறக்கும். பெண்களிடம்
மிகுந்த பாசமாக பழகுவார்.

· வலது மார்பில் மச்சம் இருந்தால் அவர்
வாழ்க்கை நடுத்தரமாக இருக்கும். பெண்கள்
குழந்தைகள் நிறைய பெற்றிடுவார்.

· மார்பின் மேல் புறத்தில் மச்சம் இருந்தால்
பிறர் விஷயங்களில் தேவையில்லாம
தலையிடும் குணத்துடன் இருப்பார்.
அமைதியான சுபாவமும் கடுமையான
உழைப்பாளியாகவும் இருப்பார்.

· வயிற்றின் மீது மச்சம் உள்ளவர்கள்
பொதுவாக பெறாமை குணம் நிறைந்தவராக
இருப்பார்கள்.

· வயிற்றின் இடப்புறத்தில் மச்சமிருந்தால்
நல்ல குணங்களையும் உழைத்து வாழ
விரும்பும் எண்ணம் கொண்டவர்களாக
இருப்பார்கள்.

· வயிற்றில் கீழ்பக்கத்தில் மச்சம்
இருந்தால்
பலவீனமானவனாக இருப்பான்.

· தொப்புள் மீது மச்சம் இருந்தால் அவன்
வசதியான வாழ்க்கைக்கு சொந்தக்காரனாக
இருப்பான்.

· வலது தோளில் மச்சம் இருப்பவர் சின்ன
சின்ன விஷயக்களுக்கு கூட மனதை
அலட்டிக் கொள்வார்.

· வலது உள்ளங்கையில் மச்சம் இருந்தால்
நல்ல நண்பர்களின் நட்பைப்
பெற்றிருப்பார்கள்.

· இடது உள்ளங்கையில் மச்சம் உள்ளவர்கள்
தேவையில்லாத பிரச்சனைகளை தன்
பக்கம் இழுத்துக் கொண்டு
கஷ்டப்படுவார்கள்

· முதுகில் மச்சம் இருப்பவர்கள்
அதிர்ஷ்டசாலிகளாகவும், பக்திமான்களாகவும்
இருப்பார்கள்.

· முதுகின் வலப்பக்கம் தோளுக்கு அருகே
மச்சம் உள்ளவர் பயந்த சுபாவம் உள்ளவராக
இருப்பார்.

· முதுகின் இடப்பக்கம் தோளுக்கு அருகே
மச்சம் உள்ளவர் சிறப்பான வாழ்க்கையை
பெற்றிருப்பார். தீவிரமாக ஆலோசித்து
பிறகு எந்த காரியத்தையும் செய்யும்
மனநிலை அவருக்கு இருக்கும்.

Saturday, November 6, 2010

இல்லற வாழ்க்கை இனித்திட... (படித்ததில் சுட்டது )

திருமண‌ம் எ‌ன்பது ஆ‌யிர‌ங்கால‌த்து‌ப் ப‌யி‌ர், ‌திருமண‌ம் சொ‌ர்‌க்க‌த்‌தி‌ல் ‌நி‌ச்ச‌யி‌க்க‌ப்படுவது, மனை‌வி அமைவதெ‌ல்லா‌ம் இறைவ‌ன் கொடு‌த்த வர‌ம்.. எ‌ன்பது போ‌ன்ற பழமொ‌ழிக‌ள் ‌திருமண‌த்‌தி‌ன் மு‌க்‌கிய‌த்துவ‌த்தை உண‌ர்‌த்து‌ம் வகை‌யி‌ல் அமை‌ய‌ப்பெ‌‌ற்று‌ள்ளது.

‌திருமண‌ம் எ‌ன்பது பெ‌ற்றோரா‌ல் பா‌ர்‌த்து ‌நி‌ச்ச‌யி‌க்க‌ப்ப‌ட்டு ‌நட‌த்‌தி வை‌க்க‌ப்படு‌வது. ஆனா‌‌ல் த‌ற்போது காத‌ல் ‌திருமண‌ங்களு‌ம் அ‌திகள‌வி‌ல் நட‌க்‌கி‌ன்றன. ஆனா‌ல் எ‌ந்த வகையான ‌திருமணமாக இரு‌ந்தாலு‌ம், த‌ம்ப‌திக‌ள் ஒ‌த்து‌ப் போனா‌ல் ம‌ட்டுமே அவ‌ர்களது வா‌ழ்‌க்கை ‌நீடி‌க்கு‌ம்.

‌‌சி‌‌ன்ன ‌சி‌ன்ன கரு‌த்து மோத‌ல்களு‌க்கு எ‌ல்லா‌ம் ‌விவாகர‌த்து கே‌ட்டு ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ன் படிகளை ஏறு‌ம் த‌ம்ப‌திக‌‌ளி‌ன் எ‌ண்‌ணி‌க்கை அ‌திக‌ரி‌த்து வரு‌கிறது.

கணவனோ, மனை‌வியோ எ‌ந்த ‌வித‌த்‌தி‌ல் ‌பிர‌ச்‌சினை வ‌ந்தாலு‌ம், இருவரு‌ம் ஒரு அ‌ணி‌‌யி‌‌ல் ‌நி‌ன்று ‌பிர‌ச்‌சினையை சமா‌ளி‌க்கு‌ம் போது குடு‌ம்ப‌‌ம் வலு‌ப்பெறு‌ம். ஆனா‌ல், அவ‌ர்களு‌க்கு‌ள்ளாகவே ‌பிர‌ச்‌சினையை உருவா‌க்‌கி‌க் கொ‌ண்டு இரு அ‌ணிகளாக ‌நி‌ன்று போராடு‌ம் போது குடு‌ம்ப உறவு‌க்கு‌ள் பல து‌ர்தேவதைக‌ளி‌ன் ஆ‌தி‌க்க‌ம் மேலோ‌ங்கு‌ம். அது பெ‌ண்‌ணி‌ன் தா‌யாகவு‌ம் இரு‌க்கலா‌ம், ஆ‌ணி‌ன் தா‌ய் ம‌ற்று‌ம் தம‌க்கைக‌ளி‌ன் ஆ‌தி‌க்கமாகவு‌ம் இரு‌க்கலா‌ம்.

இதுகு‌றி‌த்து ஒரு நகை‌ச்சுவை ஒ‌ன்று உ‌ள்ளது. அதாவது காத‌லி‌க்கு‌ம் போது காதல‌ன் பேசுவா‌ன், காத‌லி கே‌ட்பா‌ள், ‌திருமண‌த்‌தி‌‌ற்கு‌ப் ‌பிறகு மனை‌வி பேசுவா‌ள், கணவ‌ன் கே‌ட்பா‌ன், குழ‌ந்தை ‌பிற‌ந்த ‌பிறகு இருவருமே பேசுவா‌ர்க‌ள் ஊரே‌க் கே‌ட்கு‌ம் எ‌ன்பது போல குடு‌ம்ப வா‌ழ்‌க்கை ஆ‌கி‌விட‌க் கூடாது.

குடு‌ம்ப ‌பிர‌ச்‌சினைக‌ளி‌ல் பெரு‌ம்பாலு‌ம் கணவனது குடி‌ப்பழ‌க்க‌ம், வேலை‌யி‌ல்லாத கணவ‌ன், குடு‌ம்ப‌த்தை நட‌த்துவத‌ற்கான வருமான‌ம் இ‌ன்‌மை, கணவரது தா‌ய் ம‌ற்று‌ம் தம‌க்கைய‌ரி‌ன் கொடுமை, அ‌ல்லது பா‌லிய‌ல் ‌பிர‌ச்‌சினை‌க‌ள் போ‌ன்றவை ஒரு பெ‌ண்‌ணி‌ற்கு எ‌திராக ‌நி‌ற்‌கி‌ன்றன.
இதே‌ப்போல, குடு‌ம்ப‌த்‌தி‌ற்கு ஒ‌த்து வராத பெ‌ண், குடு‌ம்ப சூ‌ழ்‌நிலை‌க்கு ஏ‌ற்ப மா‌ற்‌றி அமை‌த்து‌க் கொ‌ள்ளாத பெ‌ண், ஊதா‌‌ரி‌த் தன‌ம், பல ஆ‌ண்க‌ளி‌ன் சகவாச‌ம், குடு‌ம்ப‌த்‌தி‌ற்கு அட‌ங்காத பெ‌ண் போ‌ன்றவை ஆ‌ணி‌ன் மு‌ன் ‌நி‌ற்கு‌ம் ‌பிர‌ச்‌சினைகளாகு‌ம்.

எதுவாக இரு‌ந்தாலு‌ம், நமது அ‌ன்பாலு‌ம், பொறுமையாலு‌ம் ஒருவரை அனுச‌ரி‌த்து‌ச் செ‌ன்று அவருடனான வா‌ழ்‌க்கையை இ‌னிதா‌க்‌கி‌க் கொ‌ள்வது எவராலு‌ம் முடியு‌ம் ‌விஷய‌ம்தா‌ன். (இ‌‌தி‌ல் முடியாத ‌வி‌தி‌வில‌க்குகளு‌ம் உ‌ள்ளன.

எனவே, ‌பிர‌ச்‌சினை துவ‌ங்கு‌ம் போதே அதை‌ப் ப‌ற்‌றி இருவரு‌ம் மன‌ம் ‌வி‌ட்டு‌ப் பே‌சி ‌பிர‌ச்‌சினையை ‌தீ‌ர்‌த்து‌க் கொ‌ள்ளலா‌ம். எதையு‌ம் அ‌றிவு‌ப்‌பூ‌ர்வமாக ஆராயாம‌ல், மன‌ப்பூ‌ர்வமாக ஆரா‌ய்‌ந்தா‌ல் ந‌ல்ல வ‌ழி ‌கி‌ட்டு‌ம்.

அ‌ப்படியே ‌பிர‌ச்‌சினைக‌ள் துவ‌ங்‌கி அதை கவ‌னி‌க்காம‌ல் ‌வி‌ட்டு‌வி‌ட்டு பு‌ண் ‌புரையோடி‌ப் போன சூ‌ழ்‌நிலை‌யி‌ல் த‌ம்ப‌திக‌ள் ஒ‌ன்றாக நாடுவது ‌‌நீ‌திம‌ன்ற‌த்தை‌த்தா‌ன். ‌விவாகர‌த்து எ‌ன்ப‌தி‌லாவது த‌ம்ப‌திகளு‌க்கு ஒ‌த்த கரு‌த்து ஏ‌ற்ப‌ட்டது கு‌றி‌த்து ‌சில இட‌ங்க‌ளி‌ல் ஆ‌ச்ச‌ரிய‌ப்பப‌ட்டு‌த்தா‌ன் ஆக வே‌ண்டு‌ம். அ‌ந்த அள‌வி‌ற்கு எ‌லியு‌ம் பூ‌னையுமாக இரு‌க்கு‌ம் த‌ம்ப‌திகளு‌ம் உ‌ண்டு.

‌நீ‌திம‌‌ன்ற‌ங்க‌ளில், விவாகரத்து கேட்டு வரும் தம்பதிகளுக்கு உ‌டனடியாக வழ‌க்கு‌ப் ப‌திவு செ‌ய்து ‌விவாகர‌த்து வழ‌ங்க‌ப்படுவ‌தி‌ல்லை. முதலில் உளவியல் ரீதியாக ஆலோசைன வழ‌ங்க‌ப்படு‌கிறது. தேவைப்பட்டால் பல தடவைகூட ஆலோசனை நடத்துகிறார்கள். முடிந்தவரை தம்பதிகளை சேர்த்து வைக்கவே இ‌ந்த ‌நீ‌திம‌ன்ற‌‌ங்க‌ள் முயற்சி செய்கின்றன. இறு‌தி வரை விவாகரத்து பெற்றே தீருவது என்று இருவரில் ஒருவர் பிடிவாதமாக இருந்தாலோ அல்லது இருவரும் பிடிவாதமாக இருந்தாலோ வழக்கு நடத்தி விவாகரத்து வழங்கப்படுகிறது.

இந்தக் கால இளம் தலைமுறையினருக்கு விட்டுக் கொடுத்தல், சகிப்புத்தன்மை போன்ற நற்குணங்கள் இல்லாத காரணத்தால்தான் விவாகரத்து வழக்குகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே போகிறது.

விவாகரத்து கேட்டு வரும் ஜோடிகளை சேர்த்து வைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் குடும்ப நல ‌நீ‌திம‌ன்ற‌ங்க‌ள் இப்போது புதிய முயற்சியாக, இல்லற வாழ்க்கை இனித்திட... என்ற தலைப்பில் 10 அறிவுரைகளை தமிழில் அறிவிப்பாக எழுதி வைத்துள்ளன.

இந்த அறிவிப்பு, முதன்மை குடும்ப நல ‌நீ‌திம‌ன்ற வளாகத்திலும், முதலாவது மற்றும் இரண்டாவது குடும்ப நல ‌நீ‌திம‌ன்ற வளாகத்திலும் அனைவரது கண்ணில்படும்படி வைக்கப்பட்டு உள்ளது.

இதனை அனை‌த்து த‌ம்ப‌திகளு‌ம் ‌பி‌ன்ப‌ற்‌றி வ‌ந்தாலே பெரு‌ம்பாலான குடு‌ம்ப ‌பிர‌ச்‌சினைக‌ள் வராது. அ‌ப்படியே தலைதூ‌க்‌கினாலு‌ம் அவை பெ‌ரிய அள‌வி‌ல் உருவாகாது.

‌நீ‌ங்களு‌ம் ‌திருமணமானவராக இரு‌ப்‌பி‌ன் இவ‌ற்றை படியு‌ங்க‌ள். ‌பி‌ன்ப‌ற்‌றி‌ப் பாரு‌ங்க‌ள். உ‌ங்க‌ள் இ‌ல்லற‌ம் ந‌ல்லறமாகு‌ம்.

* ஒரேசமயத்தில் இருவரும் கோபப்படாதீர்கள்.

* வாக்குவாதம் ஏற்படுகின்ற பிரச்சினைகளில் ஒருவர் மற்றவரை ஜெ‌யி‌க்க‌வி‌ட்டு மகிழ்ச்சி அடையுங்கள். விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை எப்பொழுதுமே!

* விமர்சனத்தையே வாஞ்சையுடனும், அன்புடனும் செய்து பாருங்கள்.

* கடந்தகால தவறுகளைச் சுட்டிக் காட்டாதீர்கள்.

* உலகத்திற்காக போலியாக வாழ்வதைக் காட்டிலும், உங்களுக்காகவே வாழ்ந்து பாருங்களேன்.

* விவாதம் தவிர்க்க முடியாதது என்றால், கூடியவரைக்கும் அதை ஒத்திப் போடுங்கள்.

* ஒரு நாளைக்கு ஒரு முறையாவது ஒரு அன்பான வார்த்தையோ அல்லது வாழ்த்தோ உங்கள் துணையிடம் உபயோகப்படுத்திப் பாருங்கள்.

* செய்த தவறை உணரும்போது அதை ஒத்துக் கொள்ளவும் அல்லது அதற்காக மன்னிப்புக் கேட்கவும் தயங்காதீர்கள். மேலு‌ம்,

இல்லற வாழ்க்கை இனித்திட, மூன்று தாரக மந்திரங்கள். (இவ‌ற்றை எ‌ப்போது‌ம் மன‌தி‌ல் கொ‌ள்ளு‌ங்க‌ள்)

சூழ்நிலைக்கேற்ப நடந்து கொள்ளுதல்.

அனுசரித்துப் போகுதல்.

மற்றவர்களை மதித்து நடத்தல்.

ந‌ம் வா‌ழ்‌க்கை ந‌ம் கை‌யி‌ல்தா‌ன் உ‌ள்ளது.