Friday, November 26, 2010

அட பாவிகளா ஆண்களின் மச்சத்தில இவளவு இருக்கா?

· வலது பொட்டில் மச்சம் இருந்தால் திடீரென பெரும்
செல்வமும் புகழும்கிடைக்கும்.

· நெற்றியின் வலப்புறத்தில் மச்சம் இருந்தால்
எதிர்பாராத தனப்பிராப்தி கிடைக்கும்.

· வலது புருவத்தில் மச்சம் இருந்தால் அதிர்ஷகரமான
மனைவி அமைவார்.

· வலது கண்ணில் மச்சம் இருந்தால் நண்பர்கள்
உறவினர் மூலம் புகழ் கிடைக்கும்.

· வலது கண்ணுக்குள் வெண்படலத்தின்
மேற்புறத்தில் மச்சம் இருந்தால் அவர் ஆன்மீக
சிந்தனையுள்ளவராக புகழ் பெற்று விளங்குவார்.

· இரு கண்களில் ஏதெனும் ஒன்றில்
வெண்படலத்தின் கீழ் புறத்தில் மச்சம்
இருந்தால் அவர்களுக்கு பல பிரச்சனை
சந்திப்பார்கள்.

· இரு கண்களில் ஏதேனும் ஒரு வெளிப்புற
ஓரத்தில் மச்சம் இருந்தால்
அவர் வாழ்க்கை சீராக இருக்கும். இருப்பினும்
தனது வாழ்நாளில் அவர்
ஏதேனும் ஒரு வன்முறை சம்பவத்தை
சந்திப்பார்.

· இடது புருவத்தில் மச்சமிருந்தால்
பணக்கஷ்டமான வாழ்க்கை அமையும்.

· இடது கண் வெண்படலத்தில் மச்சமிருந்தால்
வறுமையான வாழ்க்கைஅமையும் இருப்பினும்
அதை சமாளிக்கும் பக்குவமும் இருக்கும்.

· இடது கண்ணின் வலப்புறத்தில் சொத்து
விஷயங்களில் சங்கடங்களை சந்திப்பார்கள்.
இருப்பினும் ஓரளவுக்கு சொத்தை சேகரித்து
விடுவார்கள்.

· இடது கண்ணின் இடப்புறத்தில் மச்சம்
இருந்தால் உறவினர்களுடன்பிரச்சனை
ஏற்பட்டு தனிநபர் ஆவார்கள். இருப்பினும்
அவர்களது வாழ்நாளின் பிற்பகுதியில்
அதிர்ஷ்டத்தை அடைவார்கள்.

· மூக்கின் மேல் பகுதியில் மச்சம் இருந்தால்
அவர்கள் எல்லா சௌகரியமும்
பெற்றிடுவார்கள்.

· மூக்கின் வலதுபுறத்தில் மச்சம் இருந்தால்
நினைத்ததை நடத்தி முடிக்கும்
வல்லமை பெற்றிருப்பார்கள்.

· மூக்கின் இடது புறத்தில் மச்சம் இருந்தால்
எதை நம்பாதவர்களாகஇருப்பார்கள்.
தவறான பெண்ணின் நட்பு_சிநேகமும்
இவர்களுக்கு இருக்கும்.

· மூக்கின் நுனியில் மச்சம் இருந்தால்
அவர்கள் தயக்க குணம் உள்ளவர்களாக
இருப்பார்கள், சற்றே கர்வமும், சற்றே
பாதுகாப்புஉணர்வும் இவர்களிடம் மிகுந்திருக்கும்.

· மூக்கின் கீழே மச்சமுள்ளவர்கள் கேடான
வழிகளில் பணத்தை செலவிடுபவர்களாக
இருப்பார்கள்.

· நாசித்துவாரங்களுக்கு மேலே மச்சம்
உள்ளவர்கள நவநாகரீக மோகமுள்ளவர்களாக
இருப்பார்கள். வசதியான வாழ்க்கையை
கொண்டிருப்பார்கள்.

· மேல் உதட்டிலோ அல்லது கீழ் உதட்டிலோ
மச்சம் இருந்தால் அவர்கள் காதல் உணர்வு
மிகுந்திருப்பார்கள்.

· மோவாயில் மச்சம் இருந்தால் செல்வாக்கு,
புகழ் இவற்றோடு சமூகத்தில் நல்ல
மதிப்பு பெற்றிருப்பார்கள்.

· மோவாயின் இடதுபுறத்தில் மச்சம்
இருந்தால் அவர்கள் மேடு, பள்ளமான
வாழ்க்கையை அனுபவிப்பார்கள்,கல்வியறிவும்
குறைவாக இருக்கும்.

· மோவாய்க்கு அடியில் மச்சம் இருந்தால்
அவர்கள் இசையில் வல்லுநர்களாக இருப்பார்கள்.

· வலது கன்னத்தில் மச்சம் இருந்தால்
அவருக்கு பிறரை வசீகரிக்கிற சக்தி இருக்கும்.
உறவினர்கள் அவரை மிகவும் நேசிப்பார்கள்.
எப்பொழுதும் சிரித்த முகத்துடன் மகிழ்ச்சியான
வாழ்க்கை அமையும்.

· இடப்புறக் கன்னத்தில் மச்சம் இருந்தால்
அவர் வறுமை,உயர்வு என இரண்டு விதமான
வாழ்க்கையை மாறி, மாறிஅனுபவிப்பார்.

· வலது காதில் மேல் நுனியில் மச்சம்
இருந்தால் தண்ணீரில் கண்டம் இருக்கக்கூடும்.

· இடது காதின் மேல் நுனியில் மச்சம் இருந்தால்
பெண்கள் சம்பந்தமான விஷயங்களில்
எச்சரிக்கையாக நடந்து கொள்ளவேண்டும்.

· இரண்டு காதுகளிலும் மச்சம் இருந்தால்
அவர் அதிர்ஷ்டக்காரர். பேச்சுதிறன், பிறரை
வசீகரிக்கும் ஆற்றல், செல்வம் எல்லாமும்
அவரை வந்தடையும்.

· தொண்டையில் மச்சம் இருந்தால்
திருமணத்தின் மூலம்அவர்களுக்குச் சொத்து
கிடைக்கும்.

· கழுத்தின் வலதுபுறத்தில் மச்சம்
இருந்தால் பங்காளிகளின் மூலம் பெயரும்,
புகழும், சொத்தும் கிடைக்கும்.

· கழுத்தின் இடது புறத்தில் மச்சம் இருந்தால்
அவர் மிதமான நலன்களுடன் வாழ்வார்.

· இடது மார்ப்பில் மச்சம் இருந்தால் ஆண்
குழந்தைகள் நிறைய பிறக்கும். பெண்களிடம்
மிகுந்த பாசமாக பழகுவார்.

· வலது மார்பில் மச்சம் இருந்தால் அவர்
வாழ்க்கை நடுத்தரமாக இருக்கும். பெண்கள்
குழந்தைகள் நிறைய பெற்றிடுவார்.

· மார்பின் மேல் புறத்தில் மச்சம் இருந்தால்
பிறர் விஷயங்களில் தேவையில்லாம
தலையிடும் குணத்துடன் இருப்பார்.
அமைதியான சுபாவமும் கடுமையான
உழைப்பாளியாகவும் இருப்பார்.

· வயிற்றின் மீது மச்சம் உள்ளவர்கள்
பொதுவாக பெறாமை குணம் நிறைந்தவராக
இருப்பார்கள்.

· வயிற்றின் இடப்புறத்தில் மச்சமிருந்தால்
நல்ல குணங்களையும் உழைத்து வாழ
விரும்பும் எண்ணம் கொண்டவர்களாக
இருப்பார்கள்.

· வயிற்றில் கீழ்பக்கத்தில் மச்சம்
இருந்தால்
பலவீனமானவனாக இருப்பான்.

· தொப்புள் மீது மச்சம் இருந்தால் அவன்
வசதியான வாழ்க்கைக்கு சொந்தக்காரனாக
இருப்பான்.

· வலது தோளில் மச்சம் இருப்பவர் சின்ன
சின்ன விஷயக்களுக்கு கூட மனதை
அலட்டிக் கொள்வார்.

· வலது உள்ளங்கையில் மச்சம் இருந்தால்
நல்ல நண்பர்களின் நட்பைப்
பெற்றிருப்பார்கள்.

· இடது உள்ளங்கையில் மச்சம் உள்ளவர்கள்
தேவையில்லாத பிரச்சனைகளை தன்
பக்கம் இழுத்துக் கொண்டு
கஷ்டப்படுவார்கள்

· முதுகில் மச்சம் இருப்பவர்கள்
அதிர்ஷ்டசாலிகளாகவும், பக்திமான்களாகவும்
இருப்பார்கள்.

· முதுகின் வலப்பக்கம் தோளுக்கு அருகே
மச்சம் உள்ளவர் பயந்த சுபாவம் உள்ளவராக
இருப்பார்.

· முதுகின் இடப்பக்கம் தோளுக்கு அருகே
மச்சம் உள்ளவர் சிறப்பான வாழ்க்கையை
பெற்றிருப்பார். தீவிரமாக ஆலோசித்து
பிறகு எந்த காரியத்தையும் செய்யும்
மனநிலை அவருக்கு இருக்கும்.

Saturday, November 6, 2010

இல்லற வாழ்க்கை இனித்திட... (படித்ததில் சுட்டது )

திருமண‌ம் எ‌ன்பது ஆ‌யிர‌ங்கால‌த்து‌ப் ப‌யி‌ர், ‌திருமண‌ம் சொ‌ர்‌க்க‌த்‌தி‌ல் ‌நி‌ச்ச‌யி‌க்க‌ப்படுவது, மனை‌வி அமைவதெ‌ல்லா‌ம் இறைவ‌ன் கொடு‌த்த வர‌ம்.. எ‌ன்பது போ‌ன்ற பழமொ‌ழிக‌ள் ‌திருமண‌த்‌தி‌ன் மு‌க்‌கிய‌த்துவ‌த்தை உண‌ர்‌த்து‌ம் வகை‌யி‌ல் அமை‌ய‌ப்பெ‌‌ற்று‌ள்ளது.

‌திருமண‌ம் எ‌ன்பது பெ‌ற்றோரா‌ல் பா‌ர்‌த்து ‌நி‌ச்ச‌யி‌க்க‌ப்ப‌ட்டு ‌நட‌த்‌தி வை‌க்க‌ப்படு‌வது. ஆனா‌‌ல் த‌ற்போது காத‌ல் ‌திருமண‌ங்களு‌ம் அ‌திகள‌வி‌ல் நட‌க்‌கி‌ன்றன. ஆனா‌ல் எ‌ந்த வகையான ‌திருமணமாக இரு‌ந்தாலு‌ம், த‌ம்ப‌திக‌ள் ஒ‌த்து‌ப் போனா‌ல் ம‌ட்டுமே அவ‌ர்களது வா‌ழ்‌க்கை ‌நீடி‌க்கு‌ம்.

‌‌சி‌‌ன்ன ‌சி‌ன்ன கரு‌த்து மோத‌ல்களு‌க்கு எ‌ல்லா‌ம் ‌விவாகர‌த்து கே‌ட்டு ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ன் படிகளை ஏறு‌ம் த‌ம்ப‌திக‌‌ளி‌ன் எ‌ண்‌ணி‌க்கை அ‌திக‌ரி‌த்து வரு‌கிறது.

கணவனோ, மனை‌வியோ எ‌ந்த ‌வித‌த்‌தி‌ல் ‌பிர‌ச்‌சினை வ‌ந்தாலு‌ம், இருவரு‌ம் ஒரு அ‌ணி‌‌யி‌‌ல் ‌நி‌ன்று ‌பிர‌ச்‌சினையை சமா‌ளி‌க்கு‌ம் போது குடு‌ம்ப‌‌ம் வலு‌ப்பெறு‌ம். ஆனா‌ல், அவ‌ர்களு‌க்கு‌ள்ளாகவே ‌பிர‌ச்‌சினையை உருவா‌க்‌கி‌க் கொ‌ண்டு இரு அ‌ணிகளாக ‌நி‌ன்று போராடு‌ம் போது குடு‌ம்ப உறவு‌க்கு‌ள் பல து‌ர்தேவதைக‌ளி‌ன் ஆ‌தி‌க்க‌ம் மேலோ‌ங்கு‌ம். அது பெ‌ண்‌ணி‌ன் தா‌யாகவு‌ம் இரு‌க்கலா‌ம், ஆ‌ணி‌ன் தா‌ய் ம‌ற்று‌ம் தம‌க்கைக‌ளி‌ன் ஆ‌தி‌க்கமாகவு‌ம் இரு‌க்கலா‌ம்.

இதுகு‌றி‌த்து ஒரு நகை‌ச்சுவை ஒ‌ன்று உ‌ள்ளது. அதாவது காத‌லி‌க்கு‌ம் போது காதல‌ன் பேசுவா‌ன், காத‌லி கே‌ட்பா‌ள், ‌திருமண‌த்‌தி‌‌ற்கு‌ப் ‌பிறகு மனை‌வி பேசுவா‌ள், கணவ‌ன் கே‌ட்பா‌ன், குழ‌ந்தை ‌பிற‌ந்த ‌பிறகு இருவருமே பேசுவா‌ர்க‌ள் ஊரே‌க் கே‌ட்கு‌ம் எ‌ன்பது போல குடு‌ம்ப வா‌ழ்‌க்கை ஆ‌கி‌விட‌க் கூடாது.

குடு‌ம்ப ‌பிர‌ச்‌சினைக‌ளி‌ல் பெரு‌ம்பாலு‌ம் கணவனது குடி‌ப்பழ‌க்க‌ம், வேலை‌யி‌ல்லாத கணவ‌ன், குடு‌ம்ப‌த்தை நட‌த்துவத‌ற்கான வருமான‌ம் இ‌ன்‌மை, கணவரது தா‌ய் ம‌ற்று‌ம் தம‌க்கைய‌ரி‌ன் கொடுமை, அ‌ல்லது பா‌லிய‌ல் ‌பிர‌ச்‌சினை‌க‌ள் போ‌ன்றவை ஒரு பெ‌ண்‌ணி‌ற்கு எ‌திராக ‌நி‌ற்‌கி‌ன்றன.
இதே‌ப்போல, குடு‌ம்ப‌த்‌தி‌ற்கு ஒ‌த்து வராத பெ‌ண், குடு‌ம்ப சூ‌ழ்‌நிலை‌க்கு ஏ‌ற்ப மா‌ற்‌றி அமை‌த்து‌க் கொ‌ள்ளாத பெ‌ண், ஊதா‌‌ரி‌த் தன‌ம், பல ஆ‌ண்க‌ளி‌ன் சகவாச‌ம், குடு‌ம்ப‌த்‌தி‌ற்கு அட‌ங்காத பெ‌ண் போ‌ன்றவை ஆ‌ணி‌ன் மு‌ன் ‌நி‌ற்கு‌ம் ‌பிர‌ச்‌சினைகளாகு‌ம்.

எதுவாக இரு‌ந்தாலு‌ம், நமது அ‌ன்பாலு‌ம், பொறுமையாலு‌ம் ஒருவரை அனுச‌ரி‌த்து‌ச் செ‌ன்று அவருடனான வா‌ழ்‌க்கையை இ‌னிதா‌க்‌கி‌க் கொ‌ள்வது எவராலு‌ம் முடியு‌ம் ‌விஷய‌ம்தா‌ன். (இ‌‌தி‌ல் முடியாத ‌வி‌தி‌வில‌க்குகளு‌ம் உ‌ள்ளன.

எனவே, ‌பிர‌ச்‌சினை துவ‌ங்கு‌ம் போதே அதை‌ப் ப‌ற்‌றி இருவரு‌ம் மன‌ம் ‌வி‌ட்டு‌ப் பே‌சி ‌பிர‌ச்‌சினையை ‌தீ‌ர்‌த்து‌க் கொ‌ள்ளலா‌ம். எதையு‌ம் அ‌றிவு‌ப்‌பூ‌ர்வமாக ஆராயாம‌ல், மன‌ப்பூ‌ர்வமாக ஆரா‌ய்‌ந்தா‌ல் ந‌ல்ல வ‌ழி ‌கி‌ட்டு‌ம்.

அ‌ப்படியே ‌பிர‌ச்‌சினைக‌ள் துவ‌ங்‌கி அதை கவ‌னி‌க்காம‌ல் ‌வி‌ட்டு‌வி‌ட்டு பு‌ண் ‌புரையோடி‌ப் போன சூ‌ழ்‌நிலை‌யி‌ல் த‌ம்ப‌திக‌ள் ஒ‌ன்றாக நாடுவது ‌‌நீ‌திம‌ன்ற‌த்தை‌த்தா‌ன். ‌விவாகர‌த்து எ‌ன்ப‌தி‌லாவது த‌ம்ப‌திகளு‌க்கு ஒ‌த்த கரு‌த்து ஏ‌ற்ப‌ட்டது கு‌றி‌த்து ‌சில இட‌ங்க‌ளி‌ல் ஆ‌ச்ச‌ரிய‌ப்பப‌ட்டு‌த்தா‌ன் ஆக வே‌ண்டு‌ம். அ‌ந்த அள‌வி‌ற்கு எ‌லியு‌ம் பூ‌னையுமாக இரு‌க்கு‌ம் த‌ம்ப‌திகளு‌ம் உ‌ண்டு.

‌நீ‌திம‌‌ன்ற‌ங்க‌ளில், விவாகரத்து கேட்டு வரும் தம்பதிகளுக்கு உ‌டனடியாக வழ‌க்கு‌ப் ப‌திவு செ‌ய்து ‌விவாகர‌த்து வழ‌ங்க‌ப்படுவ‌தி‌ல்லை. முதலில் உளவியல் ரீதியாக ஆலோசைன வழ‌ங்க‌ப்படு‌கிறது. தேவைப்பட்டால் பல தடவைகூட ஆலோசனை நடத்துகிறார்கள். முடிந்தவரை தம்பதிகளை சேர்த்து வைக்கவே இ‌ந்த ‌நீ‌திம‌ன்ற‌‌ங்க‌ள் முயற்சி செய்கின்றன. இறு‌தி வரை விவாகரத்து பெற்றே தீருவது என்று இருவரில் ஒருவர் பிடிவாதமாக இருந்தாலோ அல்லது இருவரும் பிடிவாதமாக இருந்தாலோ வழக்கு நடத்தி விவாகரத்து வழங்கப்படுகிறது.

இந்தக் கால இளம் தலைமுறையினருக்கு விட்டுக் கொடுத்தல், சகிப்புத்தன்மை போன்ற நற்குணங்கள் இல்லாத காரணத்தால்தான் விவாகரத்து வழக்குகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே போகிறது.

விவாகரத்து கேட்டு வரும் ஜோடிகளை சேர்த்து வைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் குடும்ப நல ‌நீ‌திம‌ன்ற‌ங்க‌ள் இப்போது புதிய முயற்சியாக, இல்லற வாழ்க்கை இனித்திட... என்ற தலைப்பில் 10 அறிவுரைகளை தமிழில் அறிவிப்பாக எழுதி வைத்துள்ளன.

இந்த அறிவிப்பு, முதன்மை குடும்ப நல ‌நீ‌திம‌ன்ற வளாகத்திலும், முதலாவது மற்றும் இரண்டாவது குடும்ப நல ‌நீ‌திம‌ன்ற வளாகத்திலும் அனைவரது கண்ணில்படும்படி வைக்கப்பட்டு உள்ளது.

இதனை அனை‌த்து த‌ம்ப‌திகளு‌ம் ‌பி‌ன்ப‌ற்‌றி வ‌ந்தாலே பெரு‌ம்பாலான குடு‌ம்ப ‌பிர‌ச்‌சினைக‌ள் வராது. அ‌ப்படியே தலைதூ‌க்‌கினாலு‌ம் அவை பெ‌ரிய அள‌வி‌ல் உருவாகாது.

‌நீ‌ங்களு‌ம் ‌திருமணமானவராக இரு‌ப்‌பி‌ன் இவ‌ற்றை படியு‌ங்க‌ள். ‌பி‌ன்ப‌ற்‌றி‌ப் பாரு‌ங்க‌ள். உ‌ங்க‌ள் இ‌ல்லற‌ம் ந‌ல்லறமாகு‌ம்.

* ஒரேசமயத்தில் இருவரும் கோபப்படாதீர்கள்.

* வாக்குவாதம் ஏற்படுகின்ற பிரச்சினைகளில் ஒருவர் மற்றவரை ஜெ‌யி‌க்க‌வி‌ட்டு மகிழ்ச்சி அடையுங்கள். விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை எப்பொழுதுமே!

* விமர்சனத்தையே வாஞ்சையுடனும், அன்புடனும் செய்து பாருங்கள்.

* கடந்தகால தவறுகளைச் சுட்டிக் காட்டாதீர்கள்.

* உலகத்திற்காக போலியாக வாழ்வதைக் காட்டிலும், உங்களுக்காகவே வாழ்ந்து பாருங்களேன்.

* விவாதம் தவிர்க்க முடியாதது என்றால், கூடியவரைக்கும் அதை ஒத்திப் போடுங்கள்.

* ஒரு நாளைக்கு ஒரு முறையாவது ஒரு அன்பான வார்த்தையோ அல்லது வாழ்த்தோ உங்கள் துணையிடம் உபயோகப்படுத்திப் பாருங்கள்.

* செய்த தவறை உணரும்போது அதை ஒத்துக் கொள்ளவும் அல்லது அதற்காக மன்னிப்புக் கேட்கவும் தயங்காதீர்கள். மேலு‌ம்,

இல்லற வாழ்க்கை இனித்திட, மூன்று தாரக மந்திரங்கள். (இவ‌ற்றை எ‌ப்போது‌ம் மன‌தி‌ல் கொ‌ள்ளு‌ங்க‌ள்)

சூழ்நிலைக்கேற்ப நடந்து கொள்ளுதல்.

அனுசரித்துப் போகுதல்.

மற்றவர்களை மதித்து நடத்தல்.

ந‌ம் வா‌ழ்‌க்கை ந‌ம் கை‌யி‌ல்தா‌ன் உ‌ள்ளது.

Tuesday, October 12, 2010

காதல் சரியா தவறா? காதலிப்பது சரியா தவறா? (படித்ததில் சுட்டது )

காதல் என்றால் என்ன? காதல் சரியா தவறா? காதலிப்பது சரியா தவறா? என்பன என்றைக்கும் புதிதாகத் தெரிகிற பழைய கேள்விகளே.

‘இப்படிப்பட்டதுதான் காதல்’ என்று யாராலும் கட்டம் கட்டி இலக்கணம் சொல்லி விட முடியாது என்பதுதான் காதலின் சிறப்பம்சம். காதல், சிலருக்கு அமிர்தம். சிலருக்கு விஷம்! சிலருக்கு அது புனிதம், நம்பிக்கை, ஏகாந்தம். வேறு சிலருக்கோ அது... புதிர், ஏமாற்றம், பயம், இவ்வாறு காதல் எல்லோரிடத்திலும் ஒவ்வொருவிதமான உருவெடுத்துக்கொள்ளும்.

ஏன், இப்படி காதலின் முகம் ஆளாளுக்கு மாறுபடுகிறது? அதை அமிர்தமாகவோ, விஷமாகவோ மாற்றுவது எது? நம்பிக்கையான காதலின் நிறம் என்ன? ஏமாற்றம் தரும் காதலின் உருவம் என்ன? என்பதும் கேள்விக்குறியே.

காதல் என்பதே ஒரு வகையில் திட்டமிடுதல்தான். ‘எனக்கு எப்படியும் யாராவது ஒருவன் கணவனாக வரப் போகிறான். என்னை ஓரளவுக்குப் புரிந்து கொண்டிருக்கிற, எனக்காக இவ்வளவு செய்யும் நீயே, என்னில் இவ்வளவு அக்கறை கொள்ளும் நீயே, எனக்காகவே வாழும் நீயே அந்த ஒருவனாக இருந்தால் நல்லதுதானே’ என்று மனம் போடும் கணக்கு, காதலின் முக்கியக் கூறு! இது ஆண்களுக்கும் பொருந்தும்.

அவன் எவ்வளவு சம்பாதிக்கிறான், என்ன வாகனம் வைத்திருக்கிறான், அவன் வீட்டில் எத்தனை பேர் என்பதையெல்லாம் சேர்த்து அந்தக் கணக்கைப் போடுவதில் எந்தத் தவறும் இல்லை. ‘பிரதிபலன் பார்க்காமல் வருவதுதான் உண்மையான காதல். கணக்குப் பார்ப்பது காதலுக்கே களங்கம்’ என்றெல்லாம் இளைஞர்களிடம் பரவலாக இருக்கும் உணர்ச்சிவசப்பட்ட வாக்கியங்கள்தான்.

கல்லூரிப் பருவம் என்றதுமே கூடவே வந்து விடுகிறது, காதல்! இனக்கவர்ச்சி ஆபத்தில் சிக்கி பலரும் திசைமாறிப் போய்விட, காதலை ஆக்கப்பூர்வமான ஒரு சக்தியாக பயன்படுத்தி வாழ்க்கையில் ஜெயித்த காதலர்களும் இருக்கின்றார்கள்,

நம் தமிழ்க் கலாச்சாரத்தில் பெண் என்றாலே அவள் தனக்குப் பிடித்தக் காதலைக் கூட முதலில் மறுத்து, பிறகுதான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற செயற்கையான லாஜிக் இருப்பதால், ‘மனம் துணிந்து காதலைச் சொன்னால் அது வெற்றியாக முடிந்தே ஆக வேண்டும்’ என்ற உளவியல் அழுத்தம் பெண்கள் மத்தியில் தோன்றிவிடுகிறது.

‘காதலைப் பொறுத்தவரை பெண்தான் தேர்ந்தெடுப்பவளாக இருக்கவேண்டும். ஆண் என்பவன் அவள் முடிவுக்கு அடிபணிபவனாக இருக்க வேண்டும்’ என்ற எதிர்பார்ப்பே, ஆணாதிக்கம் போன்ற ஒருவித ஆதிக்க உணர்வுதான். பணிவது, பணியவைப்பது என்பதையெல்லாம் தாண்டிய பரஸ்பர அன்புதானே காதல்?

ஒரு பெண்ணுக்கு பிடித்தவன், பிடிக்காதவன் என்று இருப்பதுபோல ஆணுக்கும் இருக்கும்தானே? தன்னிடம் காதல் சொல்லும் பெண்ணையெல்லாம் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றால் அவனைக் காதலன் என்று சொல்வதா... இல்லை, பெண்பித்தன் என்று சொல்வதா?

சிலர் நினைக்கலாம். ஆணும் பெண்ணும் சகஜமாக பழகுவது என்பது தவறே இல்லை. அதைக் கூடாது என்று கண்டிப்பது பிற்போக்குத்தனம்தான். ஆனால், எதற்குமே ஒரு எல்லை இருக்கிறது என்பதை மறந்துவிடக் கூடாது. பெண்களே நீங்கள் ஒரு ஆணோடு களங்கமில்லாமல் பழகுவதுபோலவே அவனும் உங்களோடு பழகுவான் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்? தோளில் கை போட்டுக் கொண்டு வலம் வருவது உங்களைப் பொறுத்தவரை நட்பாக இருக்கலாம். ஆனால், நம் சமூகம் இன்று வரை கல்யாணம் செய்து கொள்வதையே ‘கரம் பிடிப்பது’ என்று சொல்கிறது. உங்கள் மனதில் களங்கமில்லை, விரசமில்லை, தடுமாற்றம் இல்லை! ஆனால், நீங்கள் மட்டுமே உலகமில்லை என்பதை மனதில் ஆணி அடித்தாற்போல எப்போதும் நினைத்திருக்கவேண்டும்!

பெண்களே ‘நான் நல்லவளாக இருக்கும்போது, யார் என்னை என்ன செய்துவிட முடியும்?’ என்று கேட்பதை தைரியம் என்று சொல்வதைவிட அசட்டு தைரியம் என்று சொல்வதுதான் சரி. உங்களுடைய பாதுகாப்பு உங்களைப் பொறுத்தது மட்டுமல்ல. உங்களை சுற்றியிருக்கிற ஆண்களின் ஒழுக்கமும் அதில் பங்கு வகிக்கிறது.

நாம் கனவு காண்பது போன்ற, ஆண் &பெண் பேதமில்லாத கலாசாரம் வெளிநாடுகளிலும் இருக்கத்தான் செய்கிறது. ஆனால், அவர்களைப் பொறுத்தவரையில் கற்பு என்பதோ, கல்யாணம் என்பதோ, பாலியல் தவறுகள் என்பதோ பெரிய விஷயமில்லை. இரண்டு கல்யாணம், மூன்று குழந்தைகள் என்று இருக்கும் பெண்களையும் வெளிநாட்டில் ஒரு ஆண் காதலிப்பான். அதேபோல பெண்களும் காதலிப்பார்கள்.

இன்னொரு விடயம் காதலில் பொய் முக்கிய இடத்தை வகிக்கின்றது.

பொய் என்பது அத்தனை ரசிக்கக் கூடியதா? பொய் சொல்லாமல் காதலிக்க முடியாதா? கவிதைக்குப் பொய் அழகு... சரி, காதலுக்கும் அதுதான் அழகா? & இப்படி ஏகப்பட்ட சந்தேகங்கள், எல்லா காதலர்களின் இதயத்தில் குடிகொண்டிருக்கின்றது.

நம் எல்லோருக்குமே உண்மையைவிட பொய்யின்மீது அதிக ஈர்ப்பு இருக்கத் தான் செய்கிறது. காரணம், உண்மை என்பது எந்த மாற்றமும் இல்லாமல், இருந்தபடியே இருந்துகொண்டு நம்மை ஜீரணிக்கச் சொல்கிறது. ஆனால், பொய் நமக்காகவே உருவாக்கப்படுகிறது. நாமாகவே உருவாக்கிக்கொள்ளலாம். காதலில் ஆண்களே அதிகமாக பொய் சொல்கின்றனர் என்கிறது ஆய்வுகள்.

நமக்குப் பிடித்த மாதிரியான திருப்பங்களை எல்லாம் கொண்டிருக்கிற ஒரு நாவலைப் போல, பொய் நமக்குப் பிடித்தமான எல்லா அம்சங்களோடும் ஜோடிக்கப்படுகிறது. அதனால்தான் அதை ரசிக்க முடிகிறது. சினிமாவில் வரும் டூயட் பாடல்கள்கூட ஒருவகையில் பொய்தான். நிஜ வாழ்க்கையில் அப்படி எந்த காதல் ஜோடியும் பாடி ஆடுவதில்லை. அதுதான் நிஜம். ஆனால், அந்த நிஜத்தைவிட டூயட் எனும் பொய் ரசிக்கும்படியாக இருக்கிறது, அல்லவா? அப்படித்தான், பொய் சொல்லும் ஆண்களையும் பெண்கள் ரசிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள்.

சின்னதொரு பொய்கூட சொல்லாமல் ஒரு மனிதன் தன் வாழ்க்கையை வாழ்ந்து முடிப்பது மிகமிகக் கடினம். ஆனால், அது எப்படிப்பட்ட பொய் என்பதுதான் கவனிக்கவேண்டியது.

காதலின் கெட்ட குணம் பொய் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒருவனை பிடித்துப் போகும் வரைதான், அவன் செய்யும் நல்லது கெட்டது பற்றிய ஆராய்ச்சியெல்லாம். அதன் பிறகு மனம் ஏதாவது ஒரு குருட்டுக் காரணம் சொல்லி அவன் செய்கையையெல்லாம் நியாயப்படுத்திக் கொண்டிருக்கும்.

காதலுக்குள்ளும் இல்லறத்துக்குள்ளும் பொய் உலவுவது என்றைக்கிருந்தாலும் ஆபத்துதான். ‘சின்னப் பொய் தானே’ என்ற சமாதானம் அர்த்தமற்றது. அடுத்தவரை ஏமாற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு சொல்லப்படும் எல்லா பொய்யுமே பெரிய பொய்தான். எனவே காதலர்களே, தம்பதிகளே ஒருவருக்கொருவர் உண்மையைப் பேசி காதலியுங்கள். உங்கள் வாழ்க்கை இனிமையானதாக அமையும்.

அடுத்து, சில ஆண்கள் பெண்களிடம் மிகவும் தாழ்வான எண்ணத்தை கொண்டிருப்பார்கள்.

எப்படிப்பட்ட பொண்ணாக இருந்தாலும் சரி நாலு வரி புகழ்ந்து பேசினா போதும். நம்பளையே சுத்தி சுத்தி வருவாங்க’ என்று நினைப்பினைக் கொண்ட ஆண்களும் இப்பூவுலகில் வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றனர். தப்பில்லை அப்படி ஆண்கள் நினைப்பதற்கு காரணமாக சில பெண்களும் நடப்பதனாலேயே ஆண்களிடம் இவ்வாறான எண்ணங்கள் நிலைகொண்டிருக்கின்றன.

‘நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க’
‘இந்த ட்ரஸ் உங்களுக்கு ரொம்ப அழகா இருக்கு’
‘உங்க குரல் இருக்கே.. ஸ்வீட்டோ ஸ்வீட்!’
உங்கள் கூந்தல் ரொம்ப அழகாக இருக்குது

பெண்களை ‘காதல் கடலில் வீழ்த்த’ இப்படி ஏகப்பட்ட வாசகங்களை சில ஆண்கள் பயன்படுத்துகின்றனர். பெண்களும் புகழ்ச்சியின் உச்சத்தால் கண்மூடித்தனமாக காதல் கடலில் மூழ்கின்றனர். பெண்கள் ‘எல்லோருமே’ வர்ணனைக்கு மயங்குகிறவர்கள் என்று ஒரு சிலர் இப்படி மெத்தனமாகப் பேசிக் கொண்டு திரிவதற்குக் காரணம் இருக்கிறது. தங்கள் அறியாமையாலும் எதையும் எளிதாக நம்பிவிடும் வெகுளித்தனத்தாலும் இன்றுவரை இப்படிப்பட்ட ஆண்களின் வலையில் சிக்கிக் கொள்ளும் பெண்களும் இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.

ஆனால், எவனோ ஒருவன், தேவையில்லாமல் நம்மிடம் வர்ணனைகளை வார்க்கிறான்.. பொய் பொய்யாகப் பொழிகிறான் என்றால், ‘அவன் நோக்கம் என்னவாக இருக்கும்..’ என்பதை பெண்கள் சிந்திக்க வேண்டும். இனிமேலாவது சிந்திப்பார்களா பெண்கள்?

உங்களை கல்யாணம் செய்ய விரும்புகிறவன் என்றால், அவன் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை கூசும் அளவுக்கா வர்ணிப்பான்? சிந்தியுங்கள் பெண்களே..!

அதற்காக, உங்களைச் சுற்றி இருக்கும் அப்படிப்பட்ட வர்ணனை பார்ட்டிகளை ஒவ்வொரு முறையும் கன்னத்தில் அடித்து அவமானப்படுத்தத் தேவையில்லை. பொய் என்று தெரிந்தாலும் நம்மைப் பற்றி உயர்வாக ஒருவர் பேசும்போது, ஒருவித உற்சாகம் மனதில் பிறக்கத்தான் செய்யும். ஒரு சின்னப் புன்னகை, ஒரு ‘தங்க்யூ’ போன்றவற்றால் அவர்களை சமாளித்து, கடந்தும் விடலாம்.

அதை விட்டுவிட்டு, போயும்போயும் ஒரு வெற்றுப் புகழ்ச்சிக்காக வாழ்க்கையையே ஒருவனிடம் ஒப்படைக்கும் அளவுக்குப் போவதில், எந்தவித அர்த்தமும் இருப்பதாகத் தெரியவில்லை. என்ன செய்ய.. ஒருசிலர் காதலில் ஆண்களின் வர்ணனைக்கு ஆட்கொண்டு தம் வாழ்க்கையை அழித்த பெண்களும் உள்ளனர்.

ஒரு பெண், ஒரு அந்நிய ஆணிடம், ‘நீ மன்மதன் மாதிரி இருக்கிற.. உன்னுடைய கண் ரொம்ப அழகு.., மீசை வீரமானவன் என்று சொல்லுது, தோள்கள் அழகாக இருக்குது ’ என்றெல்லாம் வர்ணித்து, அவனை மகிழ்ச்சிப்படுத்துவது இல்லை! ‘தனக்கானவனிடம் மட்டுமே அப்படி நடந்து கொள்ளவேண்டும்’ என்று தனக்குள்ளாகவே ஒரு ஒழுக்கத்தை வகுத்துக் கொண்டு காதலிக்கிறாள், வாழ்கிறாள். ஆனால் அந்த ஒழுக்கம் ஆணிடமும் இருக்க வேண்டாமா? அந்நியப் பெண்களை வர்ணிக்கும் ஆண்களையெல்லாம் அந்த ஒழுக்கத்தை மீறியவர்களாகக் கருதிக் கொள்வதில் ஒன்றும் தவறில்லையே.

பெண்களைப் பொறுத்தவரை பயந்தாங்கொள்ளி பட்டாம்பூச்சியாக சிறகடித்து பறக்காதீர்கள். உணர்ச்சிகளை தற்காத்து கொள்வதிலும், போராடுவதிலும், பெண் என்பவள் தேனீயாகவே வாழவேண்டும்.

இதோ காதலித்துக்கொண்டிருப்பவர்களுக்காக ஒரு சின்ன கதை.

காதலியைப் பிரிந்து போர்க்களத்தில் இருந்த ஒரு ராணுவ வீரனுக்கு அவன் காதலியிடமிருந்து ஒரு கடிதம். ‘நீ சென்ற பிறகு எனக்கு ஒரு BoyFriend கிடைத்தான். அவனைத்தான் நான் மணக்கப் போகிறேன். அதனால், உன்னிடம் உள்ள என் புகைப்படத்தை திருப்பி அனுப்பிவிடு’ என்று அதில் எழுதியிருந்தது.

அவளுக்கு பதிலடி கொடுக்க நினைத்த அவன், சக வீரர்களின் காதலி, தோழிகள் என்று பல பெண்களின் புகைப்படங்களையும் சேகரித்து, அவற்றோடு அந்தக் காதலியின் புகைப்படத்தையும் சேர்த்து அனுப்பினான். கூடவே, ஒரு கடிதம்... ‘உங்கள் கடிதம் கிடைத்தது. எவ்வளவு யோசித்தும் உங்கள் முகம் எனக்கு ஞாபகம் வரவேயில்லை. அதனால் நான் இதுவரை சந்தித்த எல்லா பெண்களின் புகைப்படத்தையும் அனுப்பி உள்ளேன். உங்கள் படத்தை எடுத்துக் கொண்டு, மற்றதை திருப்பி அனுப்பி விடவும்!’

நம்மைப் புறக்கணிப்பவர்களுக்கு சரியான தண்டனை நாம் அவர்களைப் புறக்கணிப்பதுதான். அவன் நல்லவனோ... கெட்டவனோ, கெட்டவன் என்று நினைத்துக் கொள்வதுதான் நமக்கு நல்லது.

‘கிட்டாதாயின் வெட்டென மற’. அவ்வளவுதான்!

‘‘காதலுக்கு கண்ணில்லை என்பது உண்மையோ இல்லையோ மூளையில்லை என்பது உண்மை’’

Monday, October 4, 2010

சும்மா Time Passக்கு (அவளும் Diagramமும்)

உன்னைக் காதலிக்க தொடங்கின போது Activity Diagram போல அழகாக சிக்கலில்லாம இருந்தாய் ஆனால் இப்போ ER-Diagramபோல சிக்கலாய் மாறிவிட்டது நீ கிட்ட கிட்ட வரும்போது State Diagram வரைவது போலசின்ன சின்ன வித்தியாசங்கள்(எமது State இல்).


சின்ன சின்ன பிரச்சினைகள்தான் வாழ்க்கையில் பிடிப்புகள் ஏற்படக்காரணம் Diagrams இல ஏற்படுகின்ற பிழைகளை திருத்தும் போது அதில் உள்ள interest அதிகரிப்பது போல எமது காதலின் பிடிப்பும் அதிகரித்தது.


உன்னை பற்றி எழுதும் கவிதைகள் Object Diagram வரைவது போல (உன்னை ஓர் class ஆக கருதி) ஒரு உணர்வு.


என்னதான் இருந்தாலும் இரவில உன்ட புகைப்படத்தை பார்ப்பதுசெய்த வேலையை preview பார்ப்பது போன்ற ஒரு திருப்தி.


சில வேளை உன்னோட கதைக்கைக்க சந்தோசம் சில வேளை கவலை அது எமது Communication Diagram இல் தங்கியது அது State Diagram ஐ மிகவும் பாதித்தது. SLIIT lab இல் ஒளிந்து ஒளிந்து மூஞ்சிபுத்தகம்(facebook) பாப்பது போல உன்னை ஒருநாளும் ஒழிந்து பாத்ததும் இல்லை.

சில வேளை யாரும் சில instructors கேள்விகள் எப்பவுமே நான் பதில் சொல்ல தெரியாமல் முளிப்பது போலவே நான் எங்கேயாவது உன்னை சந்திக்க கேட்டால் முழிப்பாய் பதில் சொல்ல மாட்டாய் நானும் காத்திருப்பன் பதில் வரும் வரும்எண்று பின்னர் yes சொல்லி பெரிய OPP எல்லாம் போடுவாய் உன் அப்பா அம்மாவுக்கு தெரிந்து விடும் என்று இல்லை என் அப்பா அம்மாவுக்கு தெரிந்து விடும் என்று அவளவு அன்பு உனக்கு என்னிடத்தில்.


உன்னோட கதைச்சு கதைச்சு சில விடயங்களை ஊகிச்சிக் கொள்ளுவன்ஆனால் சில வேளை அடுத்த நாள் நீ கதைப்பது நேற்றுக் கதைத்த்தற்கும் சம்பந்தம் இல்லாம இருக்கு முதல் நாள் lecturesகும் அடுத்தநாள் lecturesகும் சம்மந்தம் இல்லாதது போல. இதனால் எமக்கிடையே உள்ள Relationship அடிக்கடி Dependency, Association, Aggregation, Composition என மாறிக்கொண்டே இருக்கும் ஒரு முறை நாளை online exam என்று அவளின் அம்மாவிடம் சொன்னேன் தந்த codingஐ கரெக்ட் பண்ணி கொடுக்கணும் என்று அதற்கு அவங்க சொன்னங்க முதல்ல உன்னை நீ பொறுப்பான பையனா மாத்து பிறகு Coding எல்லாம் மாத்தலாம் என்று.


பின்னர் தான் உணர்ந்தேன் Use-case Diagramல் பல Uses இருப்பது போல நமது வாழ்க்கையிலும் பலர் உள்ளார்கள் என்று அவர்கள் ஒவ்வொருவருக்கும் பல வேறு Attributes உண்டு என்று இப்படிதாங்க எதோ எழுத வந்திட்டு எதோ எழுதுவது போல தான் லும் அ கவனிக்காம வேற எதோ கவனிப்பது போல. பின்னர் weekக்கு முதல் இருந்து முக்கி முக்கி படிப்பது அட பாருங்க இப்ப எனக்கு Study Leave இப்பவாவது படிப்பம் என்று இல்ல இத எழுதிட்டு இருக்கிறன் சரி சரி விடுங்க பொது வாழ்கையில இது எல்லாம் சகஜமப்பா...


சரி இப்ப நான் படிக்கபோறன் (சாப்பாட முடிச்சிட்டு அது தானே முக்கியம் ) என்னொரு விடயம் நண்பர்களே கடந்த எந்திரன் எனது பார்வையில்... நண்பர் Paheeradan தனது பெயரை குறிப்பிடவில்லை என்று கவலைப்படிருந்தார் அதனால இன்று Paheeradan உடன் சாப்பிட செல்லலாம் என்று உள்ளேன் மீதி பின்னர் எழுதுகேறேன்,

நன்றி வணக்கம்.


Friday, October 1, 2010

எந்திரன் எனது பார்வையில்...




எங்கு பார்த்தாலும் எந்திரன் காய்ச்சல்... அப்படி என்ன
தான் இருக்கு அந்தப்படத்தில என்று நீங்கள்
கேட்கலாம். விமர்சகர்கள் கூறுகிறார்கள் அப்படி என்ன தான் இல்லை என்று... கடந்த 3ஆண்டுகளாக என்திரனுக்காக காத்திருந்த காத்திருப்பு இன்றோடு முடிந்தது. ரூ.190 கோடியில் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்ட எந்திரன் உலகம் முழுவதும் இன்று திரைக்கு வந்துள்ளது. உலகம் முழுவதும் கிடத்தட்ட 3௦௦௦ திரைஅரங்குகளில் இன்று திரைக்கு வந்துள்ளது.நேற்று மாலை 9.00 மணி வீடை அடைந்ததும் ஒரு பெரிய கவலை எந்திரன் (V.I.P show) பார்க்க முடியல என்கிற வருத்தம், காரணம் பல அவற்றுள் சில மறுதினம் காலை 8.30கு exam.( எங்களைப்பற்றி தான் தெரயுமே நாளை எக்ஸாம் ஏன்டா இன்று 12.00கு தான் படிப்பம் என்று), அது மட்டும் அல்ல
டிக்கெட் விலை... ஒரு திரைஅரங்கில் ODC 1800Rs, பலகணி 2500Rs , மற்றயதில் ODC 25௦௦ பலகணி 3௦௦௦ அதால நிதி நெருக்கடி வேறு (இத வெளில யாருக்கும் சொல்லாதிங்க...) மனதை சரி படுத்தி தூங்கி காலை 7 .00 மணிக்கு அடிச்சு பிடிச்சு எழும்பி SLIIT கு சென்று exam ஐ முடிச்சிட்டு 1 lectures கும் முகத்த காட்டிட்டு (இன்று தான் 2ம் வருட இறுதிநாள் என்பதால்(நண்பர்கள் அனைவரும் பிரியப்போகிறார்கள் என்ற கவலை)) இவற்றை எல்லாம் முடிச்சிட்டு சினிசிட்டி போய் வரிசையில் நின்று அடிச்சு பிடிச்சு டிக்கெட் (இடையில் வரிசையில் நிக்கிறப்போ நாலு மொக்கை காமடி வேற... ) எடுத்து உள்ள போய் உக்காந்தா A.R.R இன் பாட்டு ஆரம்பமே அமர்க்களம். 10 நிமிடங்களுக்கு பின்னர் படம் அமர்க்கள ஆரம்பம்(என்ன விசில் என்ன கூ... சத்தம்...)
எந்த ஒரு பில்டப்பும் இல்லாமல் ஒரு ஆரம்பம்(புதிய மனிதா... பாடலுடன் ரஜினியா இது... வழக்கமான பஞ்ச் டயலாக், ஸ்டைல் மானரிசங்கள், அதிரடி அறிமுககாட்சி எதுவுமே இல்லாத ஒரு அறிமுகம் ). டாக்டர் வசீகரன்(ரஜினி) 10 வருடம் முயன்று ஒரு மனித ரோபோவை உருவாகுகிறார். சில சோதனைகளுக்கு பின்னர் அதை மனிதர்களிடம் இருந்து வேறுபடும் உணர்வுகளையும் கொடுக்கிறார். மனிதனாகவே மாறிய அந்த ரோபோ அடுத்து மனித இனத்தின் ஒட்டுமொத்த தீயகுணங்களையும் சுவீகாரம் எடுத்துக்கொள்கிறது. அடுத்து என்ன நடக்கிறது என்பது தெரிந்த முடிவுதான் என்றாலும் யாரும் அத்தனை சுலபத்தில் கற்பனை செய்து பாக்கமுடியாத க்ளைமாக்ஸ் (அங்கதான் நிக்கிறார் ஷங்கர்...!!!)

ஐஸ்வர்யா ராய்... அழகின் மோத்த உருவமாய் வந்து( இவங்கள எல்லாம் பெத்தாங்களா இல்ல செஞ்சாங்களா???) மனதை அள்ளிக்கொள்கிறார், கோபம், கெஞ்சல், அழுகை,கொஞ்சல்,நடனம் என ரஜினியுடன் போட்டி போட்டு நடித்திருக்கிறார் என்று தான் சொல்லனும். ரஜினியுடன் அவருக்கு நடக்கும் காதலும் ஊடலும் அதை ஐஸ்... தீர்க்கிற விதம் காதலர்களை சூடேற்றும் விதமான திரைக்கதை. வில்லனாக வரும் டேனி இக்கு பெரிதாக வேலைஇல்லை, காமடிக்காக சேர்க்கப்பட்ட சந்தானம் கருணாசுக்கும் கூட... இந்தப் படத்தில் மிக முக்கியமான அம்சம் ஸ்டான்வின்ஸ்டன் ஸ்டுடியோசின் ரோபோடானிக்ஸ்இந்தப் படத்தில் மிக முக்கியமான அம்சம் ஸ்டான்வின்ஸ்டன் ஸ்டுடியோசின் ரோபோடானிக்ஸ் மற்றும் லேஹசி எபக்ட்ஸ் இன் கிராபிக்ஸ் பிரமாண்டம். ரத்தினவேலுவின் ஒளிப்பதிவும் சாபு சிரிலின் கலையும் ஆண்டனின்எடிட்டிங்கும், பீட்டர் கையின் இன் ஸ்டன்ட்இகும் சபாஸ், அமரர் சுஜாதாவின் வசனங்கள் எளிமை... ஆனால் மஹா அர்த்தமுள்ளவை!.A.R ரஹ்மானின் இசை இனொரு ஹீரோ என்று தான் சொல்லணும். பின்னணி இசையில் சும்மா பின்னி எடித்திருக்கிறார் பாருங்க... (பாடல்களைப்பற்றி ஏற்கனவே உங்களுக்கு தெரியும் தானே)
மொத்தத்தில் இந்திய இளையவர்கள் அனைவரும் ரோபோடிக் பாட நெறி நுழைவுக்காக வசையில் நின்றாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை...!!!
இனிய நிறைவுடன் (அஆஹா படம் இவளவு சீக்கிரமா முடிசுதே என்ற பீலிங் வேறு.... அனால் மோத்த படம் 2 மணித்தியாலங்கள் 45 நிமிடங்கள் ) வீடு வந்து நண்பர் நிருயனிடம் இரவு சாப்பாடிற்க்கு ஆர்டர் கொடுத்துவிட்டு சிறிது நேரம் நண்பர்களுடன் கரம்பலகை விளையாடி விட்டு இதை எழுத்த ஆரம்பித்தேன்...

Thursday, September 30, 2010

வெளிநாடுகளில் திருவிழாக் கோலம். எந்திரன் முதல் அறிக்கை! (படித்ததில் சுட்டது)

"சூப்பர் ஸ்டார் ரஜினியை இதற்கு முன் இப்படியொரு பிரமாத கெட்டப்பில் பார்த்ததில்லை... எக்ஸலெண்ட் நடிப்பு, பிரமாதமான ஸ்டன்ட், ஐஸ் அழகு சொக்க வைக்கிறது. இயல்பான காமெடி, மிரள வைக்கும் இரண்டாம் பாகம்... குடும்பத்தோடு பார்க்க மிகச் சிறந்த பொழுதுபோக்குப் படம்!"

- எந்திரன் படம் குறித்து வந்திருக்கும் 'முதல் தகவல் அறிக்கை' இது என்றால் மிகையல்ல.

துபாயில் இன்று காலை முதல் காட்சி 7.30 மணிக்கு திரையிடப்பட்டது. இந்தக் காட்சிக்காக ஒரு மணிநேரம் முன்பாகவே காத்திருந்தனர் ரசிகர்கள். அவர்களில் துபாயில் மார்க்கெட்டிங் அதிகாரியாகப் பணியாற்றும் வருணும் ஒருவர்.

படம் பார்த்ததையும், முடிந்தபிறகு ரசிகர்கள் மனநிலையையும் அவர் நம்மிடம் தொலைபேசி மூலம் இப்படிக் கூறினார்:

"சான்ஸே இல்ல சார். படம்னா இதான். இதுக்கு மேல ஒரு ஹைடெக் கமர்ஷியல் படத்தை இனி இந்தியாவில் யாராலும் தர முடியுமா தெரியவில்லை. ரஜினி - ஷங்கர் காம்பினேஷன் அட்டகாசம். இரண்டே முக்கால் மணி நேரப் படம். எப்போது இடைவேளை வந்தது என்றே தெரியவில்லை. அதன் பிறகு, ஒன்றரை மணி நேரப் படம் போன வேகம் பிரமிக்க வைக்கிறது.

எந்திரனில் கிராபிக்ஸ் காட்சி எது என்று கண்டுபிடித்தால் ஒரு கோடி பரிசு என்று போட்டியே வைக்கலாம். அந்த அளவு மிரட்டல், அசத்தல். ஸ்டான்வின்ஸ்டன் ஸ்டுடியோ மற்றும் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் செய்த ஹாலிவுட் நிறுவனத்தினர் கலக்கி இருக்கிறார்கள்.

எந்த ஆங்கிலப் படத்தின் பாதிப்பும் இல்லை, ஒரிஜினல் இந்திய ஆங்கிலப் படம் என்றுதான் இதனை நான் வர்ணிப்பேன்.

ரஜினியின் நடிப்புக்கு இந்த முறை தேசிய விருது நிச்சயம். ரோபோவாக கலக்கி இருக்கிறார். இந்த மனிதரை இதற்கு முன் யாருமே இத்தனை அற்புதமாகக் காட்டியதில்லை. ரஜினி - ஐஸ்வர்யா ஜோடி பிரமாதம். பல காட்சிகளில் பஞ்ச் டயலாக் இல்லாத, இயல்பான ரஜினியைப் பார்க்க முடிகிறது. இயக்குநர் ஷங்கருக்கு நன்றிகள். இந்தப் படம் சர்வதேச அளவில் விருதுகள் குவிக்கும் என்பதிலும் சந்தேகம் இல்லை.

குடும்பத்துடன் அச்சமின்றிப் பார்க்கலாம் என உத்தரவாதமே தரலாம். படம் அத்தனை டீஸன்டாக உள்ளது.

படத்தின் பாடல்களுக்காகவே தனியாக இன்னொரு முறை பார்க்க வேண்டும். குறிப்பாக கிளிமாஞ்சாரோ கலக்கல்..." என்றார் அவர்.

அமெரிக்கா, பிரிட்டன், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிலும் இன்றே எந்திரன் சிறப்புக் காட்சிகள் நடக்கின்றன. அந்த திரையரங்குகள் இப்போதே திருவிழாக் கோலம் பூண்டுள்ளதாக ரசிகர்கள் தொலைபேசி மூலம் தெரிவித்தனர்.

முதல் நாள் முதல் காட்சிக்கு பல நாடுகளில் ஒரு டிக்கெட் ரூ 3500 வரை விலை போயுள்ளது. அப்படியும் டிக்கெட் கிடைக்கவில்லை என்ற மனக்குறைதான் பலருக்கு.

நார்வேயில் டிக்கெட்டுகள் முழுக்க விற்றுத் தீர்ந்துள்ளன. மீண்டும் டிக்கெட் கேட்பவர்களைத் தவிர்க்க செல்போன்களை சுவிட்ச் ஆப் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளதாக விநியோகஸ்தர் தெரிவித்தார்.

ஸ்வீடனில் இந்தப் படம் நான்கு நாட்களுக்கு திரையிடப்படுகிறது. இந்த நாட்டில் இதுவே பெரும் சாதனையாம். இந்த நான்கு நாள் காட்சிகளுக்கான டிக்கெட்டுக்கும் கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளதாம்.

சிங்கப்பூரில் 11 திரையரங்கில் எந்திரன் ரிலீஸாகிறது. முதல் காட்சி இரவு 8 மணிக்கு என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக இப்போதிலிருந்தே தவம் கிடக்கிறார்களாம் ரசிகர்கள்.